கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோர் மாதிரி, ஒமைக்ரான் தொற்றை கண்டறிய மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்படும் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட அனைவரின் மாதிரிகளும் ஒமைக்ரான் தொற்றை கண்டறிய மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அது என்ன வகையான வைரஸ் என்று முழுமையாக கண்டறியப்படவில்லை என்றார்.

ஒமைக்ரான் பாதிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என கேட்டுக் கொண்ட அவர், 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு விரைவில் பூஸ்டர் டோஸ் செலுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Translate »
error: Content is protected !!