9 பசுக்களை கொன்று மக்களை அச்சுறுத்திய புலி சிக்கியது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சீரால் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புலி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. 9 பசு மாடுகளை தாக்கி கொன்றதுடன், 6 மாடுகளை காயப்படுத்தியது.

சுமார் 150க்கும் மேற்பட்ட வன காவலர்கள் புலியை தேடி வந்த நிலையில், வனத்துறை வைத்திருந்த கூண்டில் அந்த புலி இன்று (28ம் தேதி) சிக்கியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!