கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான அவசரச் சட்டம்

நகராட்சியாக உள்ள கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான அவசரச் சட்டம் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடலூர் நகராட்சியையும் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை கடந்த தமிழக சட்டப்பேரவையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அந்த அவசரச் சட்டத்தை அரசிதழில் வெளியிடுவதற்கான ஆணையும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அதற்கான அரசிதழ்களை அச்சிட்டு வெளியிடுவதற்கான உத்தரவை சட்டத்துறை செயலாளர் சி.கோபி ரவிக்குமார் பிறப்பித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!