புதுச்சேரியில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வரும் 19ம் தேதி முதல் நடைபெற இருந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதாகவும் புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

Translate »
error: Content is protected !!