நிதி நிறுவனத்தில் 50 லட்சத்திற்கும் மேல் பணம் செலுத்திய ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ள ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் தனது கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து சுமார் 50 லட்சத்திற்கு மேல் வசூலித்து செலுத்தியதாக சொல்லப்படுகிறது.

பணம் செலுத்தி சில மாதங்களே ஆகும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வட்டி தொகை வழங்காததால் பணம் செலுத்திய மக்கள் வினோத் குமாரிடம் கேட்டு வந்த நிலையில் தற்போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காட்பாடி காவல் துறை விசாரணை மேற்கொள்கிறது.

Translate »
error: Content is protected !!