ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – ஊத்துக்கோட்டை

வங்கக்கடலில் ஏற்பட்ட தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததையடுத்து, பீச்சாட்டூர் அணையில் இருந்து  வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நேற்று மாலை வினாடிக்கு 6 ஆயிரம் மில்லியன் கனஅடி  தண்ணீர் வரத்து தற்பொழுது 3 ஆயிரம் மில்லியன் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கின்றது. 80 % பணிகள் முடிந்துள்ள மேம்பாலத்தின் மீது போக்குவரத்திற்கு தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!