கோயில் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட உதவி இயக்குனர் – அதிர்ச்சி சம்பவம்

திருவாரூர் அருகே கோயில் தெப்பக்குளத்தில் குதித்து சினிமா உதவி இயக்குனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெப்பக்குளம் அருகில் உள்ள பாரதிதாசன் நகரை சேர்ந்த தங்கரத்தினம் உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் குணசேகரன் உயிரிழந்த நிலையில் மகன் சத்யனுடன் வசித்து வருகிறார். டான்ஸ் மாஸ்டரான இவர், சென்னையில் தங்கியிருந்து திரைப்படஉதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். பல குறும்படங்களும் எடுத்துள்ளார்.

இந்நிலையில், தங்கரத்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக சத்யன் மன்னார்குடியில் தங்கியிருந்து தாயை கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற சத்யன், இரவு 9மணியாகியும் வீடு திரும்பவில்லை. அவரது தாய், சத்யனின் செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் சுச் ஆப் என வந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை ராஜகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக வந்த தகவலின் பேரில் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அது சத்யன் உடல் என்பதை கண்டறிந்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!