ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 4லட்சம் ரூபாய் கொள்ளை

 

நாமக்கல் அடுத்துள்ள பெருமாள் கோயில் மேடு பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நடேசன் என்பவருக்குச் சொந்தமான வணிகவளாகத்தில் லட்சுமி விலாஸ் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஏடிஎம்-க்குள் புகுந்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் இயந்திரம் கொண்டு அதனை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர்.

தொடர்ந்து சிக்கிக் கொள்ளாமல் இருக்க அறை முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பிச் சென்றனர். தகவலறிந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!