இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்

அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பிரபல சினிமா இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு  எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் பேட்டி அளித்தனர். இதனால் அவர்கள் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார்.

அண்மையில் அவர் உயிரிழந்ததால் போத்ராவின் மகன் ககன் போத்ரா இந்த வழக்கை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராகாததால், பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

Translate »
error: Content is protected !!