நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை வேலைநிறுத்தம்.. 10 லட்சம் பேர் பங்கேற்பு

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஆயிரக்கணக்கான வங்கிக் கிளைகள் மூடப்பட்டன. இதனால், பல கோடி ரூபாய் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!