கோவில் உண்டியலில் திருட முயன்றவருக்கு தர்ம அடி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கோவில் உண்டியல் உடைத்த நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் சுவர் ஏறி குதித்து மர்மநபர் ஒருவர்  கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர் ஒருவர் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக்கொண்டிருந்தார். இதை அறிந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் கோவில் உண்டியலை உடைத்த நபரை சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

Translate »
error: Content is protected !!