வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை

சென்னை மைலாப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை திருட்டப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சி. இவர் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அவரது சொந்த ஊரான விழுப்புரத்திற்கு  2 தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்த நிலையில் ஜான்சியின் வீட்டிற்கு அவரது தாயார் மேரி நேற்று காலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.இதனையடுத்து  ஜான்சிக்கு தகவல் தெரிவித்த அவரது தாயார் மேரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!