பேருந்துகளை இடது புற உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும்

பேருந்துகளை இடது புற உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் கிளை மேலாளர்கள், கோட்ட மேலாளர்களுக்கு, அதன் பொது மேலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பேருந்துகளை இடதுபுறத்தில் உள்ள உணவகத்தில் நிறுத்தாமல் எதிர் திசையிலுள்ள உணவகத்திற்கு சென்று நிறுத்த முயலும்போது சாலையை குறுக்கே கடந்து செல்லவேண்டும் என்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே பேருந்துகளை கட்டாயம் இடது புறத்திலுள்ள உணவகத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். இதனை மீறும் ஓட்டுநர்கள், நடந்துநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!