காரும், செல்போன் கடையும் தீக்கிரையான சோகம்

மதுரை சிம்மக்கல் பகுதியில் விபத்துக்குள்ளான காருடன் சேர்ந்து செல்போன் கடையும் தீப்பற்றி எரிந்தது. அல் அமீன் நகரை சேர்ந்த சுகன் என்பவர் தனது நண்பர்களுடன் காரில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிம்மக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட கார்,  அருகாமையில் இருந்த  செல்போன் கடையில் மோதி தீப்பற்றி எரிந்தது. காருடன் சேர்ந்து செல்போன் கடையும் மளமளவென எரிய தொடங்கியதை தொடர்ந்து, அங்கு வந்த பொதுமக்கள், காரில் இருந்த 4 பேரையும் மீட்டனர். இந்த விபத்தில், கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் தீயில் எரிந்து சேதமாகின…

Translate »
error: Content is protected !!