தினசரி ரசம் வைத்தாக கூறி மனைவியை கொன்ற வழக்கு: கணவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு


சாப்பாட்டிற்கு தினசரி ரசம் வைத்தாக கூறி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த கண்ணன் – சிவஞானசெல்வி தம்பதியருக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், கண்ணன் தினசரி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதிய உணவிற்கு தினசரியும் ரசம் வைத்து தருவதாக கூறி தனது மனைவியை கண்ணன் கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில், இன்று நடந்த இறுதி விசாரணையில், இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம் கண்ணன் குற்றவாளி என்பது உறுதியானதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

Translate »
error: Content is protected !!