பிரபல பார்முலா கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு

கோவை தொண்டாமுத்தூரில் நில தகராறு தொடர்பாக பிரபல பார்முலா கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தனது நிலத்திற்கு செல்லும் பாதையை நரேன் கார்த்திகேயன் தடுத்ததாக பிரித்விராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்தனர்.

அதே வழக்கில், நரேன் கார்த்திகேயனின் நிறுவனத்தில் பணிபுரியும் கோகுல் அளித்த புகாரின் பேரில் பிரித்வி ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலப்பிரச்சினை தொடர்பான வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!