ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

திருச்சியில் கடந்த 29.3.2012 அன்று ராமஜெயம் கொலை நடைபெற்றது. இந்த சம்பவத்தில் சிபிசிஐடி டிஜிபி ஷக்கில் அக்தர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகின்றனர். மாருதி சுசுகி வர்ஷா கார் வாகனம் இந்த கொலை வழக்கின் முக்கிய தடயமாக கிடைத்துள்ளது. தமிழக முழுவதும் 1400 மாருதி சுசுகி வர்ஷா உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் மட்டும் 250 மாருதி சுசுகி வர்ஷா வாகன உரிமையாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் முகாமில் உள்ள சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!