பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பு: இருவர் கைது

 

புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை அருகேயுள்ள புத்துகோயில் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் திருவாண்டார்கோயில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பள்ளி முடித்துவிட்டு வந்து கொண்டிருந்த அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் கழுத்திலிருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கருப்பசாமி, சசிகுமார் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

 

Translate »
error: Content is protected !!