தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருப்பதி, திருவண்ணாமலை, மதுரை ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை சேலம், மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!