தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கிழக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!