நடிகர் வில் ஸ்மித் மீதான ஒழுங்கு நடவடிக்கை கூட்ட தேதி மாற்றம்

தொகுப்பாளரை அறைந்த விவகாரத்தில் நடிகர் வில் ஸ்மித் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் கூட்டத்தை அகாடமி முன் தேதியிட்டு மாற்றியமைத்துள்ளது.

தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த சர்ச்சைக்கு பிறகு ஆஸ்கர் அகாடமி அமைப்பின் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை வில் ஸ்மித் கொடுத்த நிலையில், அதனை அகாடமி ஏற்றுக்கொண்டது.

மேலும் அகாடமியின் நடத்தை விதிகளை மீறியதற்காக ஸ்மித்துக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக வரும் 18-ஆம் தேதி நடக்கும் வாரியக் கூட்டத்தில் முடிவெடுப்போம்” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வில் ஸ்மித் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் கூட்டத்தை வருகிற 8 ஆம் தேதி முன்கூட்டியே நடத்தப்பட உள்ளதாக ஆஸ்கர் அகாடமி அறிவித்துள்ளது. இதில் வில்ஸ்மித் மீதான தடை நடவடிக்கையை தொடர்வதா வேண்டாமா எனபது குறித்து முடிவெடுக்கப்படும்.

 

Translate »
error: Content is protected !!