சென்னை: மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை 3-வது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெறியில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக முதலமைச்சர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் மருத்துவ முகாம்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், நீர் நிலைகளை ஆய்வு செய்த அவர், மழைநீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் வசதியை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

 

Translate »
error: Content is protected !!