2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,186 காவலர்கள் மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் பணியாற்றுபவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் காவலர் நிலைகளில் மூன்றாயிரம் பணியாளர்களுக்கு ‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 120 பேருக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தத் பணிகள் துறையில் 60 பேருக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்புப் பதக்கம்’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.