தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பு

கோவை மதுக்கரை அருகே கேரளாவிலிருந்து வந்த ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள வனப்பகுதிகளில் யானைகள் உலாவருவது வழக்கம். அந்த வகையில், நேற்று இரவு மதுக்கரை அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை 2 குட்டி யானைகளோடு ஒரு பெரிய யானை கடக்க முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கேரளாவில் இருந்து வந்த ரயில் 3 யானைகள் மீதும் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானைகளின் உடலை பரிசோதித்து வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!