சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து ட்வீட் செய்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்கிறது. அவமதிப்பு வழக்கை பதிவுசெய்ய மதுரைக்கிளை பதிவாளருக்கு மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சவுக்கு சங்கர் நேற்று இரவு 07.54 மணிக்கு, நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் புகைப்படத்தை பதிவு செய்து அவதூறாக ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிப்பதாகவும், அதற்கான மனுவைத் தாக்கல் செய்யுமாறும், நீதிபதி ஜி ஆர்.சுவாமிநாதன் பதிவுத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.  அதே சமயம் இது குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!