குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இன்று ராணுவ தளபதி நரவனே நேரில் ஆய்வு

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே இன்று (திங்கட்கிழமை) குன்னூர் வருகிறார். பின்னர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மேலும் ஹெலிகாப்டர் விபத்து நடந்தபோது மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் நரவனே வழங்குகிறார்.

பின்னர் 12.30 மணி அளவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இன்று நரவனே நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்். பின்னர் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளார்.

Translate »
error: Content is protected !!