கொரோனா அச்சம்: கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு விற்பனை குறைவு – விலை வீழ்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 500க்கும் மேற்பட்ட லாரிகளில் செங்கரும்பு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வராததால் கரும்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஒரு கட்டு கரும்பு 400 ரூபாய் வரை விற்றது, தற்போது 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் ஒரு லாரிக்கு ரூ.2,500 நுழைவுக் கட்டணமாக வசூலிப்பதும் தங்களை பாதிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!