நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி

மக்களவை எம்.பி., குன்வர் டேனிஷ் அலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முழுமையாக தடுப்பூசி போட்ட பிறகும் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நேற்று பாராளுமன்றத்திற்கு சென்றிருந்தேன்.

எனவே, என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை செய்து தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. விரைவில் குணமடைந்து திரும்புவேன் என அவர் என்று கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!