புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.. புதிய கட்டுப்பாடுகள் அமல்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், உணவகங்கள், ஜிம்கள், சலூன்கள் மற்றும் வணிக வளாகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகின்றன. முக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுகின்றனர்.

கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் செயல்படுகின்றன. அதேபோல், வெளியூர் செல்லும் பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!