புதுச்சேரியில் ஏற்ற, இறக்கத்துடன் தொற்று பரவல்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 76 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 49 நபர்களுக்கும், காரைக்காலில் 19 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 6 நபர்களுக்கும் என மொத்தம் 76 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலத்தில் 658 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லாததால் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1846 ஆகவே உள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை 1,24,549 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,27,053 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!