இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 33,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 08 ஆயிரம் 330 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 32,198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 23 லட்சத்து 74 ஆயிரத்து 497 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,91,516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 308 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 42 ஆயிரம் 317 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!