இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரம் 937 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 35,181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 20 லட்சத்து 28 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,89,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 509 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 39 ஆயிரம் 529 ஆக உயர்ந்துள்ளது. 

Translate »
error: Content is protected !!