12 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி அதிரடி கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே போலி பாஸ்போர்ட் மற்றும் கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 12 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு போலி பாஸ்போர்ட் மூலம் பயணித்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், யோகராஜ் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில், மற்றொரு குற்றவாளியான விஸ்வலிங்கம் தலைமறைவாகினார்.

இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பிடிபட்டுள்ளார். பின்னர் குற்றவாளியை விடா முயற்சியுடன் தேடி கண்டுபிடித்துள்ள தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!