“பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு.. மணிரத்னம் மீது வழக்கு பதிவு..!

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் இயக்குனர் மணிரத்னம் மீது காவல்நிலையத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குனர் மணிரத்னம் தற்போது “பொன்னியின் செல்வன்” படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ரம், அமிதாப் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ஐதராபாத்தில் “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு நடந்த போது திடீரென ஏற்பட்ட சிறு விபத்தால் ஒரு குதிரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இயக்குனர் மணிரத்னம் மற்றும் குதிரை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்து விசாரணை நடுத்தும்படி விலங்குகள் நல வாரியத்திற்கு தெலுங்கானா விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!