காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து புயலாக மாற வாய்ப்பில்லை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 11ஆம் தேதி காலை வடதமிழக கடற்பகுதிகளை நெருங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், கன்னியாகுமரி, விருதுநகர்,புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நெல்லை,  தூத்துக்குடி ஆகிய  டெல்டா  மாவட்டங்களில் மிக  கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  இந்த காற்றழுத்த  தாழ்வு  மண்டலம் பின்னர் வலுவிழந்து வளி மண்டல மேலடுக்கு  சுழற்சியாக புது‌ச்சே‌ரி‌-கடலூர் இடையே தமிழகத்தை  கடந்து செல்லும் எனவும்,  இது புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது

Translate »
error: Content is protected !!