ஒரே குடும்பம் ஒரே மேடையில் விருது – மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்!

தாதா சாகேப் பால்கே விருதை என் தலைவர் வென்ற அதே மேடையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது விவரிக்க முடியாதது என்று நடிகர் தனுஷ் தன் நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 67-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டு தங்களுக்கான விருதுகளை பெற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டது. அதேபோல அசுரன் திரைப்படத்தில் நடித்த தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் தனுஷ் ரஜினியும் தனுஷும் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தாதா சாகேப் பால்கே விருதை என் தலைவர் வென்ற அதே மேடையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது விவரிக்க முடியாதது என்று பெருமகிழ்ச்சியடைந்துள்ளார்.

Translate »
error: Content is protected !!