கல்லா பணத்தை எடுப்பியா? தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை

தருமபுரி அருகே பிரியாணி கடையில் இருந்த கல்லாவில் பணம் எடுத்த நபரை பிடிக்க முயன்றவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இண்டூர் அடுத்த மல்லாபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை-புஷ்பா தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சிக்கன் கடையில் பண்புரிந்துள்ளார். இந்த நிலையில் நேற்று எதார்த்தமாக தான் வேலை பார்த்த சிக்கன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் வேலை பார்த்த குமார் என்பவர் கல்லாவில் பணம் எடுக்க முயன்றதை அண்ணாதுரை கண்டித்துள்ளார்.
இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் ஆத்திரமடைந்த குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணாதுரையை குத்தியுள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து கத்தியால் குத்திய குமார் மற்றும் அவரது நண்பரையும் இண்டூர் போலீசார் கைது செய்து செய்து விசாரணை செய்கின்றனர்.

Translate »
error: Content is protected !!