செல்போனில் முழ்கிய தங்கையை அடித்தே கொன்ற கொடூர அண்ணன் – அதிர்ச்சி சம்பவம்

திண்டுக்கல்லில் முழு நேரமும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த தங்கையை அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரை சேர்ந்த கார்த்தி என்பவர் கட்டடி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில் கார்த்தியின் தங்கையான 16 வயது சிறுமி படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவரது குரல்வளை நெறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவுய் செய்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 16 வயது சிறுமி, அவரது பெரியம்மா மகன் பாலமுருகன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு செல்போனில் நீண்ட நேரம் யாருடனோ பேசியுள்ளார். இதனை பார்த்த பாலமுருகன் யாருடன் செல்போனில் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு சிறுமியிடம் இருந்து சரியான பதில் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், சிறுமி என்றும் பாராமல் அவரது குரல்வளையை நெறித்துள்ளார். இதில் சிறுமி மயக்கமடைந்ததால் பாலமுருகன் அங்கிருந்து பயத்தில் தப்பியோடியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலமுருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!