அதிமுகவுக்கு இயக்குநர் சேரன் கேள்வி

முன்னணி திரைப்பட இயக்குநரும் நடிகருமான சேரன்  ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டு முந்தைய ஆட்சியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் ”900 கோடி எங்கே” என்றும் ”முதல்வரே இந்த ஃபைல முதல்ல எடுங்க” என்றும் இயக்குநர் சேரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சேரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில். இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா. இந்த ஃபைல முதல்ல எடுத்து விசாரிங்க முதலமைச்சர் அய்யா” எனப் பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!