திமுக எம்.பிக்கள் மீதான அவதூறு வழக்கு ரத்து

கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின்போது  குப்பையிலும் ஊழல் செய்யுதுள்ளதாக அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டியிருந்தானர்.

இதை தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்குப்பதியப்பட்டது. இவ்வழக்கில் கனிமொழி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் கடந்த ஜூன் 4 ஆம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு இந்த வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரபட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து தமிழக முதல்வர் அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி கனிமொழி மீதான அவதூறு வழக்கு,  மத்திய சென்னை திமுக எம்பி  தயாநிதி மாறன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!