அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல்: 2 இந்தியர்கள் உள்பட மூன்று பேர் உயிரிழப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நடந்துள்ளது. கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்த பகுதியில் வெடிகுண்டு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. டிரோன் மூலம் தாக்கியதில் விமான நிலையத்தில் இருந்த மூன்று எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. 

இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது. கடல் வழியாக அபுதாபி அருகே வந்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Translate »
error: Content is protected !!