லாரி கவிழ்ந்ததில் மின்கம்பம் சேதம்- இருளில் மூழ்கிய கிராமங்கள்

காலி மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி சமயபுரம் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மின்கம்பம் சரிந்து விழுந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

லால்குடி வழியாக சென்னை சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் மது போதையில் லாரியை இயக்கியதால், லாரி தாருமாறாக ஓடியது. இதில், லால்குடி அருகே அகிலாண்டபுரம் கிராமத்தினைக் கடந்ததும் லாரியில் இருந்து மதுபாட்டில் மூட்டைகள் சாலையில் விழுந்து நொருங்கியது.  சற்று தூரத்தில், முத்தமிழ்நகர் பகுதியில், உள்ள பேருந்து நிழற்குடையை இடித்து, சாலையோரம் உள்ள மின் கம்பத்தில், மோதி, கவிழ்ந்தது. இதில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. அத்துடன் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த லாரி ஓட்டுனர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!