மின்சாரம் தாக்கி யானை பலி – வனத்துறை விசாரணை

கோவையில் வாழை தோட்டத்துக்குள் போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 12 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டம் உள்ளது. இந்த நிலையில், மூன்று காட்டு யானைகள் வாழைத் தோட்டத்தில் புகுந்து குழை தள்ளிய வாழை மரங்களை தின்றுள்ளது. அதில் ஒரு ஆண் யானை தோட்டத்தில் போடப்பட்டுள்ள மின் கம்பியை துதிக்கையில் பிடித்தவாறு மேட்டில் ஏற முயன்றுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி அந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!