ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் பரபரப்பு

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் பும்ராவும், தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ ஜேன்சனும் மோதல் போக்கில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியா மற்றம் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய வீரர் பும்ரா பேட்டிங் செய்த போது, தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ ஜேன்சன் பந்து வீசினார். பும்ராவுக்கு காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஜேன்சன் பந்து வீச, தோளை தட்டி விட்டு பும்ரா கெத்தாக நின்றார். இதனால் ஜேன்சன் பும்ராவை முறைக்க, பதிலுக்கு பும்ராவும் அவரை முறைத்தார். பின்னர் பும்ராவை பார்த்து ஜேன்சன் ஏதோ சொல்ல, பும்ரா சீறி சென்றார். இதனையடுத்து, இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி வேகமாக சென்று மோதல் போக்கில் ஈடுபட்டனர். உடனே நடுவர் தலையிட்டு இருவரையும் விலக்கி அனுப்பினார்.

Translate »
error: Content is protected !!