தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. மேலும் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், கனமழை காரணமாக அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை பெய்யலாம், இதனால் இந்த 7 மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை ஒட்டிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!