குடும்ப பிரச்சனை போலீஸ் தற்கொலை

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் வேலுச்சாமி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பங்களாப்புதூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக குடும்ப பிரச்சனை காரணமாக அவர் மன வருத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 நாட்கள் விடுப்பில் இருந்த காவலர் வேலுச்சாமி நேற்று கடம்பூர் மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!