பெண் காவலருக்கு குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை…

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பெண் காவலருக்கு குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர்  வீரகாந்தி. இவர் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும்  பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி லாவண்யா, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் புகார் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவலரிடமும்  வாக்குமூலம் பெற்றிருந்தார்.

இந்தநிலையில் வீர காந்தி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட வீரகாந்தி ஏற்கனவே திண்டுக்கல் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!