சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கை ரத்து செய்ய மாஜி அதிமுக எம்.எல்.ஏ மனு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தன் மீது பதியப்பட்டுள்ள போக்ஸோ வழக்கை ரத்து செய்ய மனு அளித்துள்ளார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  2017 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடும் நிலையில் அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 2020 ம் ஆண்டு என்மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு தற்போது நாகர்கோயில் போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இடைக்கால தடை விதித்து, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து, நாகர்கோயில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை  அக்டோபர் 28 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!