இரிடியத்துக்கு பதிலாக செங்கலை கொடுத்து மோசடி

 

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே இரிடியத்துக்கு பதிலாக செங்கலை கொடுத்து மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது மனோகரனின் அறைக்கு வந்த சில நபர்கள் தங்களிடம் இரிடியம் இருப்பதாக கூறி, அதன் மதிப்பு 30 லட்சம் என தெரிவித்து உள்ளனர்.  இதை நம்பிய முதியவர் மனோகர், இரிடியத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில், சிறிது நேரம் கழித்து பெட்டியை திறந்து பார்த்தபோது அதனுள் செங்கல் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் முருகானந்தம் மற்றும் கண்ணப்பனை போலீசார்  தேடிவருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!