புதுச்சேரியில் முழு அடைப்பு.. பேருந்துகள் இயங்கவில்லை.. முக்கிய வீதிகளில் கடைகள் மூடல்

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, புதுவையில் பல்வேறு கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

புதுச்சேரியில் முழு அடைப்பு காரணமாக தனியார் பேருந்துகள் இயங்கவில்லை, இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. குறைந்த அளவிலான புதுச்சேரி அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் டெம்போக்கள் இயக்கப்படுகின்றன. மேலும் நேரு சாலை, அண்ணா சாலை மற்றும் மிஷன் சாலை முக்கிய கடை வீதிகளில் காய்கறி கடைகள், துணிக்கடைகள், நகைக் கடைகள் மற்றும் மின்னணு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!